மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
ஆலத்தூர் ஒன்றிய்ததில் உள்ள தேனூர் கல்லாங்குத்து தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (42). பெரம்பலூரில் உள்ள தனியார் பேருந்தில் ஓட்டுநராக இருந்த ராஜகோபால், அவரது 15 வயதுள்ள மகளிடம் இரவு நேரங்களில் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு போதையில் வீட்டிற்கு சென்ற ராஜகோபால், தூங்கிகொண்டிருந்த அவரது மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோஸியா ராஜன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜகோபால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜகோபாலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.