முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக பல்வேறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்,
கேரளப் பகுதியில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து, உப்புத்தரா, ஐய்யப்பன்கோயில் கரையோர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.