பெண் எஸ்.ஐ.க்கு மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே: உயர் நீதிமன்றம்
மின்வாரிய ஊழியரை தாக்கிய வழக்கில், பெண் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே என சென்னை உயர் நீதமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
மின்வாரிய ஊழியரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து தாக்கிய வழக்கில், பெண் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே என சென்னை உயர் நீதமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மின்வாரிய அலுவலத்தில் மின் கணக்கீடு பணியாளராகப் பணியாற்றி வருபவர் பாலுதாய். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை கடத்தியது தொடர்பாக இவரை கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தல்லாக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷோபனா கைது செய்தார்.
பின்னர் அவரை நான்கு நாள்களாக சட்ட விரதோமாக காவலில் அடைத்து வைத்து சித்தரவதைப்படுத்தினாராம்.
Advertisement
இதையடுத்து பாலுத்தாய் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த ஆணையம், உதவி ஆய்வாளர் ஷோபனா, பாலுதாய்க்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டது.
மேலும், அத்தொகையை தமிழக அரசு வழங்கவும், பின்னர் அப்பணத்தை ஷோபனாவின் வருமானத்தில் பிடித்து கொள்ளவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஷோபனா செனனை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் என். கிருபாகரன் ஆகியோர், ஷோபனாவின் மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தனர்.