ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அக்னாபுரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் முனீஸ்வரன் (27). இவர் மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணி 11-ல் காவலராகப் பணிபுரிந்து வந்தார். 14-ம் தேதி தனது பாட்டி இறந்துவிட்டதாயும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 15 மற்றும் 16 தேதிகள் தற்செயல் விடுப்பு வேண்டும் என்றும் கேட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வியாழன் இரவு வீட்டில் விஷம் குடித்துள்ளார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் முனீஸ்வரனை அனுமதித்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி முனீஸ்வரன் உயிரிழந்தார்.
நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தந்தை முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.