விருதுநகர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் கல்பள்ளி வசாலில் தலைவர் ஜாபரூல்லா தலைமையிலும், பெரிய பள்ளிவாசலில் தலைவர் முகமது எகியா தலைமையிலும், தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் உமர் அலி தலைமையில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளி மைதானத்திலும் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பண்டிகை சிறப்புத் தொழுகையில் பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும், மதநல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, தொழுகை முடிந்து வெளியேறி வந்ததும் முஸ்லீம்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு முன்னதாக நோன்பு திருநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் பல்வேறு பொருள்கள் தர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இப்பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் பல்வேறு வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், நோன்பு திருநாளை முன்னிட்டு 30 நாள்கள் வரையில் முஸ்லீம்கள் காலை முதல் மாலை வரையில் கடும் நோன்பு மேற்கொண்டு, தொழுகையிலும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், விருதுநகரை அடுத்த ஆவுடையாபுரம், ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இத்தொழுகைக்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி பள்ளிவாசல்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.