முகப்பு
தமிழ்நாடு

எந்த கேள்விக்கும் 'இல்லை' என்ற பதிலை விரும்பாத கலாம்

எந்த ஒரு கேள்விக்கும் இல்லை என்ற பதிலை மட்டும் கூறக்கூடாது என்பதில் கலாம் தெளிவாக இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் விஞ்ஞானத்தை தேர்வு செய்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:06 AM
பகிர்:

எந்த ஒரு கேள்விக்கும் இல்லை என்ற பதிலை மட்டும் கூறக்கூடாது என்பதில் கலாம் தெளிவாக இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் விஞ்ஞானத்தை தேர்வு செய்தார்.

ஒரு முறை மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பது பற்றி பேச்சு எழுந்தது.

அப்போது, உடன் இருந்த அண்ணா பல்கலையின் பிஎச்டி மாணவர் ஏ.கே. ஜார்ஜிடம், அப்துல் கலாம் கூறியது என்ன தெரியுமா? இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு இதை நோக்கி உனது ஆராய்ச்சியை தொடர வேண்டும் என்றார். ஒரு கேள்விக்கு எந்த பதிலையும் கொடு, ஆனால் இல்லை என்ற பதிலை மட்டும் சொல்லாதே என்றார்.

Advertisement

இது குறித்து அவர் கூறியதை ஜார்ஜே நினைவு கூருகிறார்.

அதாவது, 1870ம் ஆண்டு பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் காற்றை விட சற்று எடை கூடுதலாக உள்ள எந்த ஒரு பொருளும் காற்றில் பறக்காது என்று பதிவு செய்ததை எடுத்துக் காட்டினார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை பறக்கவைத்து சாதனை படைத்தனர் என்பதை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments