ஆம்பூர்: ஆம்பூர் அருகே சொகுசு பேருந்து வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி குளீருட்டப்பட்ட சொகுசு பேருந்து சென்றது. கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ரவி (40) பேருந்தை ஓட்டிச் சென்றார். ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு பகுதியில் பேருந்து வந்தபோது பின்புற சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது.
அது பயணிகள் இருக்கை வரை பரவி எரிய ஆரம்பித்தது. அதையறிந்த உடன் பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அவர்களுடைய உடமைகளும் வெளியேற்றப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.