தமிழ்நாடு

"மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாகத் திகழச் செய்தார்'

DIN

ஜெயலலிதா மறைவுக்கு இந்திய மருத்துவச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.தாமோதரன், தலைவர் டாக்டர் டி.என்.ரவிசங்கர், மாநிலச் செயலாளர் டாக்டர் என்.முத்துராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக, குறிப்பாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இரவு பகல் பாராமல் சிறப்பாகப் பணியாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.
மருத்துவச் சமுதாயத்துக்கு அரசின் சார்பில் சிறந்த அரசு மருத்துவர் விருதுகள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், பிரசவித்த தாய்மார்களுக்கு நிதியுதவி, தமிழக மருத்துவத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதற்கு சாதனை படைத்தவர்.
மக்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்ட மாபெரும் சகாப்தம் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய மருத்துவச் சங்கத்தின் 71-ஆம் ஆண்டு மாநில மாநாடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT