சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தெரிந்தவர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது என்பது இதுவே முதல் முறை.
ராமோகன் ராவின் வீட்டில் காலை 6 மணி முதலே சோதனை நடைபெற்று வருவதால், வீட்டுக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதே போல,வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வரவும் அனுமதிக்கப்படவில்லை.
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், வீட்டின் வாயிலில் காத்திருக்கிறார்கள்.
தலைமைச் செயலாளருக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் ராமமோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
1985ம் ஆண்ட பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் ஏற்கனவே தமிழக அரசில் வேளாண், சமூக நலம், ஊரக வீட்டு வளர்ச்சி, தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர். கடந்த ஜூன் 8ம் தேதி தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் வரும் 2017ம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவரது வீட்டில் இன்று சோதனை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.