தமிழ்நாடு

டி.டி.வி.தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நேரில் ஆதரவு

DIN

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். அவர் அத்தொகுதியில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்,  அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சென்று சந்தித்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னுடைய  ஆதரவைத்த தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்வதற்கே டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். நாளை முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்.இந்த ஆட்சியை எந்த சூழ்நிலையிலும் யாரும் புகுந்து கலைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆதரவு நிலைப்பாடு.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT