தமிழ்நாடு

ரயில்வே இடத்தில் கட்டடம் கட்டிய விவகாரம்: மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

DIN

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பொன் விழா நகரைச் சேர்ந்தவர் ஷபிதா பானு. இவர், கடந்த 2010 -ஆம் ஆண்டு முருகேசன் என்பவரிடமிருந்து 1,040 சதுர அடி நிலத்தை வாங்கி, மூன்று மாடி கொண்ட கட்டடம் கட்டியுள்ளார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் ஐசிஎஃப்.க்கு சொந்தமானது எனக் கூறி, அதன் தலைமை பொறியாளர், கட்டடத்தை காலி செய்யும்படி கடந்த 2014 -ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஷபிதா பானு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2015 -ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வரைபட அனுமதியை சமர்ப்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், கட்டடத்தை வரன்முறைப்படுத்தக் கோரி மாநகராட்சிக்கு அவர் விண்ணப்பித்தார். இதையடுத்து, அந்த கட்டடத்தை அகற்றும்படி மாநகராட்சி "நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து ஷபிதா பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சம்பந்தப்பட்ட நிலமானது, இந்திய ரயில் பெட்டி தொழிற்சாலைக்குச் சொந்தமானது என்பதும், திட்ட அனுமதி இல்லாமல் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. ஆகையால், மனுதாரருக்கு எந்தவித சலுகையும் வழங்க முடியாது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT