தமிழ்நாடு

தினகரன் அறிவித்த கட்சிப் பொறுப்பை ஏற்க பண்ருட்டி எம்எல்ஏ மறுப்பு

DIN

டி.டி.வி.தினகரனால் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்சிப் பொறுப்பை ஏற்க மாட்டேன் என கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் முகநூலில் தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக எனக்கு கழக மகளிரணி இணைச் செயலர் பொறுப்பு அறிவித்துள்ளதாக அறிகிறேன்.
கழகமும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது தொண்டர்களின் கருத்து. எனவே இந்தப் பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி தலைமையின் கீழ் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரமிது: இலங்கை கேப்டன்

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

SCROLL FOR NEXT