தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் இன்று சென்னை வருகை

DIN

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை (ஆக. 26) சென்னை திரும்புகிறார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்கிறார். இதற்காக சனிக்கிழமை இரவு அவர் சென்னை வருகிறார். ஆளுநர் மாளிகையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார். இதையடுத்து, கடந்த 22- ஆம் தேதி காலையில் மும்பை சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், சனிக்கிழமை மாலை சென்னை திரும்பவுள்ளார்.
பரபரப்பான அரசியல்: எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் அளித்த கடிதத்தின் மீது ஆளுநர் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதே அரசியல் அரங்கில் தற்போது எழுப்பப்படும் வினாவாக உள்ளது. 
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக ஆளுநரை சந்திக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆளுநர் சனிக்கிழமை மாலை சென்னை திரும்பியதும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று அதிமுக தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT