தமிழ்நாடு

அன்புச்செழியன் உதகையில் பதுங்கல்?  நீலகிரியில் போலீஸார் தீவிர சோதனை

தினமணி

திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் உதகையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்துள்ள ரகசியத் தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் உதகையில் முகாமிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
 திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் ஹைதராபாதில் பதுங்கிஇருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு செல்வதற்குள் அன்புச்செழியன் தப்பி பெங்களூருவுக்குச் சென்றுவிட்டாராம். அதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் பெங்களூருவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்தும் அவர் தப்பி மைசூர் வழியாக உதகைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

உதகையில் பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட நடிகர், நடிகையருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் உள்ளன. அன்புச்செழியனைப் பொருத்தவரை திரைப்படத் துறையில் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர் என்பதால், இந்த பங்களாக்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது தமிழக-கர்நாடக எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளிலோ அவர் தங்கி இருக்கலாம் எனக் கூறப்படுவதால் தனிப்படை போலீஸார் தற்போது உதகையில் முகாமிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ளூர் காவல் துறையினரின் உதவி இல்லாமல் அவர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியே தெரியவில்லை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT