தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

DIN

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள பதவிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13}ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் ஆன்}லைனில் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். மேலும், இந்த மாதம் இறுதியில் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT