சென்னை: வாசகசாலை இலக்கிய அமைப்பின் தமிழ் இலக்கிய விருதுகள்- 2017 அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும், வாசகசாலை இலக்கிய அமைப்பானது தனது மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் மாத இறுதியில், தமிழ் இலக்கிய விருதுகள்- 2017 அறிவிப்பினை வெளியிட்டது.
அதற்கென வந்து சேர்ந்த படைப்புகளில் இருந்து ஐந்து பிரிவுகளில் விருதுக்கான படைப்புகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
சிறந்த நாவல்: ஒற்றைப் பல் - கரன் கார்க்கி
சிறந்த சிறுகதைத் தொகுப்பு: கேசம் - நரன்
சிறந்த கவிதைத் தொகுப்பு: யுகங்களின் புளிப்பு நாவுகள் - மு.ஆனந்தன்
சிறந்த கட்டுரைத் தொகுப்பு: பாதுகாக்கப்பட்ட துயரம் - களந்தை பீர் முகம்மது
சிறந்த அறிமுக எழுத்தாளர்: சுரேஷ் பிரதீப் (ஒளிர் நிழல் & நாயகிகள் நாயகர்கள்)
இந்த விருதுகள் நாளை (23.12.17) நடக்கும் வாசகசாலையின் "முப்பெரும் விழாவில்" வழங்கப்படும். விழாவானது சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி வினோபா அரங்கில் மாலை 3 மணிக்குத் துவங்கும்.
நிகழ்வில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோர் பங்குபெறவுள்ளனர்.
தொடர்புக்கு: 9942633833 & 9790443979.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.