தமிழ்நாடு

குமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் மாயம்

DIN

கன்னியாகுமரியில் இருந்து, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி, ராஜசங்கீத தெருவைச் சேர்ந்தவர் சாஜன் (32). இவர் தனக்குச் சொந்தமான வள்ளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த லாட்வின் (27), பிரசாத் (25), பிரிட்டோ (25), மைக்கிள் (26) ஆகியோருடன் கடந்த 30ஆம் தேதி இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார். இவர்கள், 31ஆம் தேதி காலையில் கரைக்கு திரும்ப வேண்டும்.
ஆனால், 3 நாள்களாகியும் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் சின்னமுட்டம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT