தமிழ்நாடு

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

DIN

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
நாகை மாவட்டம், பொறையாறு அடுத்த ஒழுகைமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி குருக்கள் (45). செம்பனார்கோயில் ஒன்றிய பாஜக தலைவரான இவர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குருக்களாக பணியாற்றி வருகிறார்.
சனிக்கிழமை நள்ளிரவு இவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை பாலாஜி குருக்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் உள்ள மரக்கதவு மீது பெட்ரோல் குண்டு பட்டு தீப்பிடித்து, அதன் வழியாக மேல்புறம் உள்ள கீற்றில் சிறிதளவு தீக்கிரையாகி சேதமடைந்திருந்தது. அத்துடன் உடைந்த பாட்டில் துண்டுகளும், பெட்ரோல் சிதறல்களும் கீழே கிடந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT