சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், போயஸ் கார்டனில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவுடன், தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக முதல்வராக சசிகலா இன்று பதவியேற்க இருந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்னும் சென்னை திரும்பவில்லை. இதனால், பதவியேற்பு எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், போயஸ் கார்டனில் நடைபெறும் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.