தமிழ்நாடு

ஈரான் சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

ஈரான் நாட்டு சிறையிலிருக்கும் 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் புதன்கிழமை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாறன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணி தொடங்கியது. பேரணிக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் எம்.கருணாமூர்த்தி தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர்கள் ஹெச்.ஜான் சௌந்தர்ராஜ், மாவட்டச் செயலர் எம்.சிவாஜி, மாவட்டப் பொருளாளர் எம்.சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், மீன்பிடி தொழிற்சங்க நிர்வாகிகள், ஈரான் சிறையிலிருக்கும் மீனவர்களின் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள், மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT