தமிழ்நாடு

சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன்: பன்னீர்செல்வம்

DIN


சென்னை: சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன். சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு தெரியும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தாற்காலிகப் பொதுச் செயலராகவே சசிகலா இருக்கிறார். விரைவில் அதிமுகவின் பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார் பன்னீர்செல்வம்.

மேலும், தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறார். சென்னைக்கு வந்தவுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துப் பேசுவேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் உரிய பதிலைத் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் அமைக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று கூறினார்.

நீங்கள் ராஜினாமாவை திரும்பப் பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று பதில் அளித்தார்.

பாஜகவால் நீங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ? குறித்த கேள்விக்கு, அது வடிகட்டிய் பொய் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT