முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வாகன நிறுத்த வசதி இல்லாத விடுதிகளை உடனே மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2017 at 1:25 PM
பகிர்:

சென்னை: சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் சென்னையைச் சேர்ந்த பெரும்பாலான தங்கும் விடுதிகளில் வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த பொழுது இது தொடர்பாக பலமுறை விடுதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சற்றும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.