சென்னை: முறையாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துளார்.
சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் சொகுசு விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.க்களை சந்தித்த பின்பு அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:
கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல். ஏக்கள் அனைவரும் நலமுடனும்,மன உறுதியுடனும் இருக்கின்றனர். முறையாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.