தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரிய திருப்பம்: நாராயணசாமி கருத்து

DIN

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது:
தமிழக அரசியல் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
உச்ச நீதிமன்றம் சசிகலா வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்துள்ளது. அதனடிப்படையில் சிறைக்குச் செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை.
இந்தத் தீர்ப்பை பொறுத்தவரை மறு ஆய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே, சசிகலா அம்மையார் முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறையின்படியும், சட்ட விதிகளின் காரணமாகவும் தண்டனை பெற்றவர் அமைச்சராகவும், முதல்வராகவும் வாய்ப்பு குறைவு. இதுபற்றி சட்ட நிபுணர்கள்தான் கருத்துக் கூற வேண்டும். தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT