தமிழ்நாடு

தமிழகத்தை மக்கள் தான் காப்பாற்ற வேண்டும்: நடிகை ஸ்ரீபிரியா

DIN

சென்னை: தமிழ்நாட்டை இனி மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுடன் பேசி காப்பற்ற வேண்டும் என்று நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சசிகலா ஆதரவு ஆட்சி அமைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பலரும் பழனிச்சாமியின் பதவியேற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீபிரியாவும் தனது டுவிட்டர் பக்க பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், எம்எல்ஏக்கள் வாக்கு கேட்டுவரும் போது பதவிக்காக கைகளை கட்டிக்கொண்டு வாக்கு கேட்கின்றனர். தற்போது மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டிய நேரம். மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுடன் பேசி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னைகள் முடிந்துவிட்டன என்று கூறிவருகின்றன. ஆனால், இப்போது தான் தொடங்கியுள்ளது என அவர்களுக்கு தெரியவில்லை. மக்கள் தங்களுக்கு யார் எம்எல்ஏவாக வர வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT