சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 88-ம், குறைந்தபட்சமாக 72 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.