தமிழ்நாடு

திமுகவுக்கு எப்போதும் துணை நிற்போம்: நாராயணசாமி

DIN

திமுகவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்று, புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி ஜனநாயக படுகொலை செய்ததாகக் கூறி, அதைக் கண்டித்து புதுச்சேரியில் திமுக சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாநில திமுக சார்பில், சுதேசி ஆலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
ஸ்டாலின் வழக்கு வெற்றி பெறும்: திமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி நேரில் வந்து வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரியும், அதை பேரவைத் தலைவர் நிராகரித்துள்ளார்.
சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினால் அதை ஏற்க வேண்டும் என விதிகள் உள்ளன. எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு, வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார். இதை எதிர்த்து, ஸ்டாலின் தொடுத்த வழக்கு வெற்றி பெறும். திமுகவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT