தமிழ்நாடு

கருணாஸ் கார் மீது காலணி வீச்சு

தினமணி

திருவாடானையில் எம்எல்ஏ கருணாஸ் கார் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்க வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கருணாஸ் கார் மீது காலணி வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கார் மீது காலணியை வீசிய சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுகவில் சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முக்குலத்தோர் புரட்சி படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT