தமிழ்நாடு

ஜெயலலிதா நல்லாசியுடன் தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்: தொண்டர்கள் மத்தியில் தீபா

DIN

சென்னை: மறைந்த ஜெயலலிதா நல்லாசியுடன் எனது தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் என தொண்டர்கள் மத்தியில் தீபா தெரிவித்தார்.
   சென்னை தியாகராயநகரில் உள்ள தீபா இல்லத்தின் முன்பு ஜெயலலிதா பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் தீபா இல்லம் முன்பு குவிந்தனர்.
   அப்போது தொண்டர்களிடையே தீபா பேசியதாவது: ஜெயலலிதாவின் நல்லாசியை பெற்று வெள்ளிக்கிழமை முதல் தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்.
   "மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற பாதையில் ஜெயலலிதாவின் வழியில்  லட்சியப் பாதையை வகுத்து வெற்றி காண்போம். தற்போதைய அதிமுகவில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் விரைவில் வெளியில் வரும். இதற்கிடையே நமது லட்சியப்  பயணத்தில் என்றும் உறுதியாக நிற்போம்.
   மேலும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவீர்களா என கேட்டதற்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்லும் எனவும், இதற்கிடையே விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் எனவும் தொண்டர்களிடையே ஆவேசமாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT