தமிழ்நாடு

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மேலும் 4 நாள்களுக்கு ஒருவழிப் பாதையாக மாற்றம்

DIN

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மார்ச் 3-ஆம் தேதி வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உதகை தேசிய நெடுஞ்சாலை உள்கோட்டத்துக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலை 67-இல் உதகை முதல் பர்லியார் வரை சிறப்பு பழுது பார்க்கும் பணியும், தார் போடும் பணியும் நடைபெறுவதால், திங்கள்கிழமை (பிப். 27) முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வர பர்லியார், குன்னூர் வழியாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்ல கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT