தமிழ்நாடு

மார்ச் 7-இல் போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

DIN

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மார்ச் 7-இல் நடக்கிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைப்பதற்காக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இதன்படி, 2013-ஆம் நடத்தப்பட வேண்டிய 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2 ஆண்டுகள் தாமதமாக 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில், 13-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்துமாறு தொழிற்சங்கத்தினர் அளித்த கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுகொண்டார்.
இதன்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி பள்ளி வளாகத்தில் மார்ச் 7-இல் நடைபெற உள்ளது.
இதில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உட்பட பல்வேறு முக்கிய தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT