சென்னை பொலிவுறு நகரத்துக்காக வடிவமைக்கப்பட்ட இலச்சினையை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை பொலிவுறு நகர நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆலோசகர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட 7 மாதிரி இலச்சினைகளை பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்த்திகேயன் மேலும் கூறியதாவது:-
ஜனவரி 21 கடைசி: இலச்சினைகளைத் தெரிவு செய்து 1 முதல் 7 வரை வரிசைப்படுத்தி வாக்களிக்கவும், மேலும் புதிய சின்னத்தை வடிவமைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஜனவரி 21 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-2561 9677 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.