மெரினாவைப் போல தருமபுரியிலும் தொடர் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து 2வது நாளாக நடந்து வரும் போராட்டத்தைப் போல, தருமபுரியிலும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:16 PM
தருமபுரி: சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து 2வது நாளாக நடந்து வரும் போராட்டத்தைப் போல, தருமபுரியிலும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இலக்கியம்பட்டி ஏரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.