தமிழ்நாடு

கேளிக்கை வரி: முதல்வருடன் திரைத் துறையினர் சந்திப்பு: நல்ல முடிவு கிடைக்கும் என விஷால் நம்பிக்கை

DIN

கேளிக்கை வரி ரத்து குறித்த தங்களின் கோரிக்கைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.

தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் 1,200 திரையரங்குகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான தமிழ் திரை அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மாநில அமைச்சர்களை இதுதொடர்பாக திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் கூறியது:

கேளிக்கை வரிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசினோம். அவர்களிடம் எங்களது கோரிக்கையை வைத்தோம். அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினோம்.
மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை அவர்கள் கேட்டுள்ளனர்.
 

முதல்வருடன் இன்று மீண்டும் சந்திப்பு: எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 4) முதல்வரைச் சந்தித்து பேச உள்ளோம். பேச்சுவார்த்தைக்குப் பின் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT