தமிழ்நாடு

சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ. 5 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் முறையே 100 மற்றும் 80 கிராம் முற்றுப்பெறாத தங்க நகைகளை தங்களின் உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT