தமிழ்நாடு

சித்திரவீணை கலைஞர் ரவிகிரணுக்கு 'சங்கீத கலாநிதி' விருது!

DIN

சென்னை: புகழ்பெற்ற சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சித்திரவீணை இசைக் கலைஞர் ரவிகிரணுக்கு மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படுகிறது. அகாடமியின் செயற்குழு உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவு இது.

மியூசிக் அகாடமி வழங்கி வரும் மழலை மேதைகளுக்கான உதவித்தொகையினை 1996-ஆம் ஆண்டு பெற்றவர் ரவிகிரண். அப்பொழுது அவர் மீது உண்டான நம்பிக்கையை தற்பொழுது முழுவதுமாக அவர் காப்பாற்றியுள்ளார். தன்னுடைய அபாரத் திறமையின் காரணமாக இசையுலகில் கவனிக்கத்தக்க உயரங்களை அடைந்துள்ளார்.     

அவருக்கான விருது எதிர்வரும் ஜனவரி 1-ஆம் தேதி வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT