பொதுத்துறை நிறுவனங்களினால் தமிழக அரசுக்கு ரூ.2,824 கோடி நட்டம்!
பதினேழு பொதுத்துறை நிறுவனங்களின் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.2,824 கோடி நட்டம் உண்டாகியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை: பதினேழு பொதுத்துறை நிறுவனங்களின் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.2,824 கோடி நட்டம் உண்டாகியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 17 பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆண்டறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2015-16 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 17 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.2,824 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.
அவற்றில் அதிகபட்சமாக தமிழக அரசுக்கு சென்னை போக்குவரத்து கழகத்தின் மூலம் ரூ.499 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த ஆண்டறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.