தமிழ்நாடு

ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலியில் சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநாட்கள் 19 ஆக அமைக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஜூலை 12 முதல் வேலைநிறுத்த போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் நிரந்தர பணி வழங்கப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வடலூர் நான்முனை சந்திப்பில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சென்னை-கும்பகோணம், கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும்,  போலீசார் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

மறுவெளியீடாகும் படையப்பா!

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகள் யார் பக்கம்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

SCROLL FOR NEXT