தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி 2 வது நாளாக தொடர்கிறது

DIN

சென்னை: சென்னை தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் புதன்கிழமை (மே 31) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடந்த கட்டடத்தின் அருகில் உள்ள மற்ற கடைகளின் வியாபாரிகளையும், அடுத்தடுத்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்களையும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் பல சிறு வியாபாரிகள், பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்தை காப்பாற்ற கட்டட இடிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை தியாகராய நகர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ஜா கட்டர் எந்திரங்கள் கொண்டு கட்டடத்தின் பின்புற பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களில் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT