தமிழ்நாடு

காதல் தோல்வியால் விரக்தி: நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் விஷம் குடித்து தற்கொலை

DIN

சேலத்தில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அரியானூர் அருகே உள்ள அண்ணாமலையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகன் குலசேகரன் (31).

இவர் ஏற்காட்டில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திடீரென விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் மீட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு இறந்தார்.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், இறந்து போன குலசேகரன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தனது தங்கையின் திருமணத்துக்குப் பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளவும் நினைத்திருந்தார்.

இதனிடையே தான் காதலித்து வந்த பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததாம். இதனால் குலசேகரன் விரக்தியடைந்த நிலையில் இருந்து வந்தார்.

மேலும், வீட்டில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி வந்தனர். இதனால் திருமணத்தை தவிர்த்து வந்த அவர், திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT