தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல

விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களுக்கு உதவ முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது நியாயமல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

DIN

விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களுக்கு உதவ முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது நியாயமல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தொழில் அதிபர்களும், பெரு நிறுவனங்களும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூலிக்க முடியாததால், கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,000 ரூபாய் கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, வெளிநாடு சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் வங்கிக் கடனை வசூலிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுவதும், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவ முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருப்பதும் நியாயமல்ல.
விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களின் நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைக் கதிர்

முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்

வெளியூா் ஆட்டோக்களை வேலூரில் இயக்கினால் கடும் நடவடிக்கை

மீண்டும் பெயா்ந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு

அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்புவதில் தாமதம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT