தமிழ்நாடு

பெயர் மாறும் ஜெ.தீபாவின் பேரவை!

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணா மகளான தீபா, தன்னுடைய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது இல்லத்தில் அளித்த பேட்டி விபரம் வருமாறு:

எனது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என் மீது சிலரால் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.

அதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் எங்களுக்கு திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது.  ஒரு மாபெரும் கட்சிக்கு தொண்டர்களின் பலம்தான் அவசியம். சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் பலம் எங்களிடம்தான் உள்ளது.

இவ்வாறு தீபா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

தபோல்கர் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானதல்ல: ஜெய் ஷா அதிரடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் 94.39% தேர்ச்சி

SCROLL FOR NEXT