தமிழ்நாடு

அவையில் இருந்து கோபத்தில் வெளியேறிய அதிமுக எம்எல்ஏ

DIN

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில் வினா எழுப்ப வாய்ப்பு தரப்படாததால் கோபமடைந்த அதிமுக எம்.எல்.ஏ., அவையில் இருந்து வெளியேறினார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, ஆறாவது கேள்வியாக சுகாதாரத் துறை தொடர்பான கேள்வியை நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தங்கதுரை எழுப்பினார்.
அப்போது, அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் துணைக் கேள்வி எழுப்ப வாய்ப்புக் கேட்டார். அவருக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் வாய்ப்பு மறுத்தார். இதையடுத்து, கோபமடைந்த அவர் பேரவையில் இருந்து திடீரென வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் மீண்டும் அவைக்கு வந்து பேரவை நடவடிக்கைகளில் முழுமையாகக் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT