தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

DIN

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை பேசியது: உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாமல் உள்ளீர்கள். ஜனநாயகத்தின் மீது அதிமுக அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டுக் கூறியது: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு திமுக சென்றதால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றார்.
மு.க.ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்): அமைச்சர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. தேர்தலை நிறுத்துவதற்காகவே நீதிமன்றத்துக்கு திமுக சென்றதைப் போல சொல்கிறார். இடஒதுக்கீடு முறையைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் சென்றோம். அதிமுக அரசு செய்தது தவறு என்றுதான் நீதிமன்றமே தேர்தலை நிறுத்தியுள்ளது.
எஸ்.பி.வேலுமணி: தவறு செய்ததாகக் கூறி நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அறிவித்துத்தான் தேர்தலை நடத்த உள்ளோம். இப்போதுகூட உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்: 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கப் போவதாக அமைச்சர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு முதலில் 33 சதவீத இடஒதுக்கீடு அளித்தது திமுகதான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT