தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு!

DIN

சென்னை: வரும் ஏப்ரல் மதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான  ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது. கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் பேசி முடிவு செய்து ஓரிரு நாளில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். . அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களை நாங்கள் சந்திக்க உள்ளோம்

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். இந்த ஆலோசனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்யின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT