திமுக எம்எல்ஏக்கள் கு.க. செல்வம், ரங்கநாதன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுகவினர் அவை விதிகளை மீறியதாக அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.
வெற்றிவேல் எம்எல்ஏ அளித்த புகாரையடுத்து திமுக எம்எல்ஏக்கள் கு.க. செல்வம், ரங்கநாதன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.