தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதுசூதனன் வேட்பு மனு ஏற்பு

தினமணி

ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இறுதி நாளான நேற்று மட்டும் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த அதிமுக பிளவுபட்டு, இரு அணிகளாக இத்தேர்தலில் போட்டியிடுவதால், ஆர்.கே. நகரில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஓரிரு நாள்களில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT