தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தீபாவுக்கு படகு சின்னம்

தினமணி


சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுபவர்களுக்கு இன்றைய தினம் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியது. முன்னதாக தனக்கு பேனா, திராட்சை கொத்து, படகு ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கும்படி தீபா கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற 50 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை தீபா நியமித்துள்ளார். சின்னம் கிடைத்தவுடன் ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை தொடங்க தீபா திட்டமிட்டிருந்தார் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி தெரிவித்தார்.

தற்போது படகு சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் தீபா தனது பிரசாரத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT