தமிழ்நாடு

கடலூரில் கூட்டுறவு வங்கியின் 31-வது கிளை திறப்பு விழா

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் கூட்டுறவு வங்கியின் 31-வது கிளையினை தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தனது வாடிக்கையாளர் சேவையில் 100-வது ஆண்டு அடியெடுத்து வைக்கிறது.

இவ்வேளையில், கூட்டுறவு வங்கியின் 31-வது கிளையினை நெய்வேலி வட்டம் 29-ல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொழிற்துறை அமைச்சர் எம்.சி சம்பத் திறந்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்த்திக், ராஜேஷ், கூட்டறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன். இயக்குநர் வா.சி கோமதி, மண்டல இணைப் பதிவாளர் சோ.இளஞ்செல்வி, பொதுமேலாளர், ஜி.சுந்தர்ராஜன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் ராஜசேகர், நெய்வேலி நகரச் செயலர் கோவிந்தராஜ், மாவட்ட தொழில்நுட்ப செயலர் பாபு, நிர்மலா கூட்டுறவு சங்க செயலர் பி.தனவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT