தமிழ்நாடு

தமிழக மீனவர்களைத் தாக்கியது கடலோரக் காவல்படையினர் அல்ல: நிர்மலா சீதாராமன் 

DIN


சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழக மீனவர்கள் காண்பித்த ரப்பர் தோட்டாக்கள் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமானது அல்ல. எனவே தாக்குதல் நடத்தியது இந்தியக் கடலோரக் காவல்படைதான் என்று கூற வேண்டாம். விசாரணைக்குப் பிறகே எல்லாம் தெரியும் என்றார்.

மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மீனவர்கள் கூறியது உண்மையாகவும் இருக்கலாம். தீவிரமாக விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியும் என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்துத் துறையிலும் தனியார் பங்களிப்பு தேவை என்பதாலேயே பாதுகாப்புத் துறையில் விதிகள் தளர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT